நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
இன்று நான் புதிதாக ஒரு ப்ளாக் துவங்குகிறேன், இந்த ப்லாக் நண்பர்களுடன் என் நட்பை தொடர உதவியாக இருக்கும். நண்பர்கள் என்றால் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது, நானும் அதே எண்ணங்களோடு தான் துவங்குகிறேன்.
என்னை பற்றி என் நண்பர்களுக்கு தெரியும் மற்றவர்களுக்காக ஒரு அறிமுகம் என் பெயர் பாலாஜி நான் கோவை மாவட்டம் உடுமலைபேட்டை நகரில் இருக்கிறேன், என் தந்தை காந்தி, 2006 வருடம் காலமாகிவிட்டார், அம்மா கிருஷ்ணவேணி அரசு பள்ளியில் பணியாற்றுகிறார்.
நான் எனது நகரிலேயே இன்டர்நெட் மையம் மற்றும் சிஃபி (சத்யம்) இன்டர்நெட் நடத்தி வருகிறேன். நான் கடந்த 2003 வருடம் முதல் நடத்தி வருகிறேன், ஆரம்பம் முதல் இன்று வரை நண்பர்கள் எனக்கும் எனது நிறுவனத்துக்கும் முன்னேற்றத்திற்கும் உதவியாக இன்றும் இருக்கிறார்கள்.
நாளை முதல் எனது சுவையான அனுபவங்களையும் மாற்ற விமர்சனங்களையும், நகைசுவைகலையும் பகிர்ந்து கொள்ளலாம். தொடர்ந்து நண்பர்களுடன் இணைந்து இருங்கள்.
நன்றி
பாலாஜி. கா